கூட்டுறவு அமைச்சரின் பெயரை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு அமைச்சரின் பெயரை பயன்படுத்தி உயரதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட கூட்டுறவு பண்டகசாலைகளில் பயோ மெட்ரிக் இயந்திரங்கள் வழங்கபட்டதாகவும் இதன் அடிப்படை விலை 3400 ரூபாய் எனவும் அதிக பட்ச விலையான 6000 சங்கங்கள் நிர்ணயித்து காசோலைகள் பெறபட்டதில் ஒன்றரை கோடி ரூபாய் வரை நிதி மோசடி நடந்துள்ளது என கூறினர்.

கூட்டுறவு சங்கங்கள் நவீன முகப்புடன் இருக்கும் நிலையில் நவீன மயமாக்குதல் என்ற பெயரில் நிதியை செயல்படுத்த உள்ளது கூட்டுறவுக்கு இழப்பு ஏற்படுத்தும் என்பதால் உடனடியாக இதனை கைவிட வேண்டும் என்றனர்.

நியாய விலைக் கடைகளில் உள்ள காலி சாக்குகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 18 ரூபாய்க்கு விற்பனை செய்ய வாய்பிருந்தும் மாநில அலவில் துணை பதிவாளர் சரகம் வாயிலாக குழுக்கள் அமைக்கபட்டு 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 350 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதால் சங்கங்கள் மூலமே விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும், கணினி பராமரிப்பு என்ற பெயரில் துறை உத்தரவு இல்லாமல் தனியார் நிறுவனங்களுக்கு மாதம் 4000 ரூபாய் வரை மாதந்தோரம் கட்டாய வசூலில் ஈடுபட்டு வருகின்ற இந்த மோசடி நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு பணியாளர்கள் சுமார் 100-கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...