மாணவர்களுக்கு தங்கள் மையத்துறையிலேயே வேலைவாய்ப்பு தரும் விதமாக குமரகுரு கல்லூரிக்கும் பி3 நிறுவனத்துக்கும் இடையே புதிய ஒப்பந்தம்


கோவையை சேர்ந்த குமரகுரு கல்லூரிக்கும் ஜெர்மன் நாட்டை தலைமை அலுவலகமாக கொண்டு செயல்பட்டு வரும் பி3 நிறுவனத்திற்கும் இடையே கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 



மாணவர்களுக்கு தங்களின் மையத் துறையிலேயே வேலைவாய்ப்பு அமைத்து தருவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். 

பி3 நிறுவனத்தின் பயிற்சி பிரிவான பி3ஏ-உம், குமரகுரு கல்லூரியும் இணைந்து மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ளவுள்ளது. 

இப்பயிற்சியில் தேர்ச்சிபெறுபவர்களுக்கு பி3 நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு அளிக்கப்படும். மற்ற மாணவர்களுக்கு பிற நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கின்றது.

குமரகுரு நிறுவனத்தின் தலைவர் சங்கர் வானவராயர் அவர்களுக்கும், பி3 நிறுவனத்தின் துணைத் தலைவர் நவ்தீப் கிரண் புராணிக் அவர்களுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 

இந்த ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக மாணவர்களுக்கு வடிவமைப்பு, ஆராய்தல், மற்றும் பராமரிப்பு போன்ற பல்வேறு கோணங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. தொழில்துறை சார்ந்த ப்ராஜெக்ட், இறுதி ஆண்டு மாணவர்களுக்கான ப்ராஜெக்ட், இன்டெர்ன்ஷிப் மற்றும் வேலை வாய்ப்புக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...