மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து கோவையில் சிபிஐஎம், விசிக கட்சியினர் சாலை மறியல்

ஜல்லிக்கட்டு மீதான தடையினை நிரந்தரமாக நீக்கக் கோரி கோவையில் நடைபெற்று வந்த போராட்டத்தைத் தொடர்ந்து இன்று காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரின் மீதும் கொடூரமான கொலைவெறித் தாக்குதல் நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.



மேலும், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல் துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனால், கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இதனைத்தொடர்ந்து, அமைதியான முறையில் தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கவேண்டி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறையினரைக் கண்டித்து கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இந்திய மாணவர் சங்கத்தினர் ஒன்றிணைந்து காந்திபுரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனைக் கண்ட அப்பகுதியில் இருந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள் கட்சியினருடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் மீண்டும் மாணவர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தி போராட்டத்தைக் கலைத்தனர்.



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...