மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையைக் கண்டித்து கோவை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்


தமிழகம் முழுவதும் நேற்று ஜல்லிக்கட்டு விவகார போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இதில், மாணவர்களின் அறப்போராட்டத்திற்கு ஆதரவாக இருந்த வழக்கறிஞர்களையும் காவல்துறையினர் தாக்கினர்.

இந்த தாக்குதலால், பல மாணவர்கள், பெண்கள், வழக்கறிஞர்கள் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சில இளைஞர்கள் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டு வருகிறது. 

இதனைத்தொடர்ந்து, மாணவர்கள் மீதும், பெண்கள், வழக்கறிஞர்கள் மீதும் தாக்குதல் நடத்திய காவல்துறையைக் கண்டித்து கோவை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில், கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தாக்குதல் நடத்திய காவல்துறையினரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...