ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் தேசிய வாக்காளர் தினம் கடைபிடிப்பு


கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் இன்று தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியின் போது, அக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜே.ஜானட் தலைமையேற்று மாணவ, மாணவிகளிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் கடமைகள் குறித்து உறுதிமொழி உரையாற்றினார்.



அப்போது, இந்திய குடிமக்களாகிய நாம் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். ஜனநாயத்தின் மரபுகள் மற்றும் கடமைகளை நிரைவேற்றுவது நமது பொறுப்பு. எவ்வித இலவசங்களையும் ஏற்று வாக்களிப்பது தவறு. ஒவ்வொரு தேர்தலிலும் இனம், மதம், சமுதாயம், மொழி உள்ளிட்டவற்றில் பாகுபாடின்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார்.

மேலும், மாணவர்களிடையே அவர் உரையாற்றுகையில், வாக்காளர் பட்டியளில் தங்களது பெயர்கள் உள்ளனவா என்று மாணவர்கள் ஆய்வு செய்து தேர்தலில் முறையாக வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது நமது உரிமை, அதனை எக்காரணத்திற்காகவும் நாம் தவிர்க்கக் கூடாது. மக்கள் நூறு சதவிகித வாக்கினை உறுதிசெய்ய வேண்டும்.



அதற்கான முதற்படி படித்த இளைஞர்கள் முன் வந்து வாக்களிப்பதே ஆகும். மாணவர்களை பின்தொடர்ந்தே மக்களும் தங்களது வாக்கினை உறுதிசெய்வர். கல்வியறிவற்ற மக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

இதேப்போன்று, ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியிலும் அக்கல்லூரி முதல்வர் டாக்டர். பி. பாபாஞானகுமார் தலைமையில் தேசிய வாக்காளர் தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...