கோவையில் இரயில் நிலையம் முற்றுகை- ம.தி.மு.க.வினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு


பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரள அரசை கண்டித்து, கோவையில் இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி உள்ளிட்ட 6 இடங்களில் கேரள அரசு தடுப்பணைகள் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. தமிழக அரசின் ஒப்பதல் இன்றி, கட்டுமான பணிகள் நடைபெறுவதை தடுத்த நிறுத்து வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பவானி ஆற்றில் தடுப்பணைகள் கட்டும் கேரள அரசை கண்டித்தும், கட்டுமான பணிகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் கோவையில் ம.தி.மு.க வினர் கோவை இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது தடுப்புகளை மீறி இரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வறட்சியினால் பாசனம் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் நிலையில், பவானி மற்றும் அமராவதி ஆற்றில் கேரள அரசு தடுப்பணை கட்டினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

மேலும் தடுப்பணை கட்டும் பணிகளை தடுத்து நிறுத்தவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 186 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக இரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...