விஎல்பி கல்லூரியின் சார்பில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கு இடையேயான "விவயுவ- 2017" போட்டிகள் இன்று துவக்கம்


கோவையில், விஎல்பி ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் "விவயுவ- 2017" என்னும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகளுக்கு இன்று துவக்க விழா கொண்டாடப்பட்டது.



இதில், மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு வகையான போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மின்னணுவியல் துறை சார்பாக ஒரு மாபெரும் கண்காட்சியும் நிகழ்த்தப்படவுள்ளது. இவ்விரு நிகழ்வுகளிலும் ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதன் துவக்க விழாவில் கோவை தி ஹிந்து நாளிதழின் முன்னாள் நிருபர் அமுதாகண்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆங்கிலம் என்பது ஒரு பாடம் அல்ல. அது ஒரு மொழி என்றும், தகவல் தொடர்பிற்கு மொழியின் அவசியம் குறித்தும் சமுதாயத்தில் தன்னை ஒரு வரலாறாய் பதிவு செய்வதற்கு மொழியும், எழுத்துப்பணியும் அவசியம் என்றும், மாணவர்களிடையே எழுத்துப் படைப்பாற்றல் வளர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், மாணவர்கள் ஆங்கில மொழியில் தன்னளவில் மேம்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். மாணவர்களிடையே கலந்துரையாடல்களையும் நிகழ்த்தி உற்சாகப்படுத்தினார்.



இந்நிகழ்வில் கல்லூரி செயலாளர் ஜெயஸ்ரீசந்தோஷ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ந.ராஜ்குமார் தலைமையுரை வழங்கினார். இளங்கலை இயக்குநர் சித்ரா வரவேற்புரையாற்றினார்.

நிறைவு விழாவில், கோவைபுதூர் சாந்தி ஆஷ்ரமத்தின் இயக்குநர் வினுஅறம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ.1 லட்சம் ரொக்க பணத்தினை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பகிர்ந்து வழங்கினார்.

நிகழ்வின் நிறைவாக பேராசிரியை ஜாய்சுகன்யா நன்றியுரை வழங்கினார். மின்னணுவியல் துறை கண்காட்சி, துறைத் தலைவர் வாசுதேவன் மற்றும் பேராசிரியர்கள் பலர் இதில் பங்கேற்றனர்.



Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...