ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காமல் வரும் குறுஞ்செய்தி?


பொதுமக்களுக்கு மானிய விலையில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்குவதற்காக தொடங்கப்பட்டது நியாய விலைக்கடை.

இதனால், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பல பொது மக்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 2005-ம் ஆண்டு வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகளை தற்போது வரை மக்கள் உபயோகித்து வருகின்றனர்.

தற்போது, ரேஷன் கார்டுகளை மாற்றிஅதற்கு பதிலாக ஸ்மார்ட் கார்டுகள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் நியாயவிலை கடைகளும் டிஜிட்டல் மையமாக்கப்பட்டு வருகின்றன.

டிஜிட்டல் மையமாக்குவதன் முதல்படியாக ஆதார் எண்களை குடும்ப அட்டையுடன் இணைக்கும் பணி நடைபெற்றது. இதன்மூலம், அதிக வருமானம் பெறுபவர்கள் மானிய விலையில் பொருட்கள் வாங்க முடியாது.

மேலும், பொதுமக்களின் கைபேசி எண் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டு, அவர்கள் மானிய விலையில் பொருட்கள் வாங்கும் போது, பொருட்களின் விலை மற்றும் அளவு ஆகியன குறித்த விவரங்கள் பொதுமக்களின் கைபேசிக்கு விரைவாக சென்றடையும்.

இந்த நிலையில், நியாய விலைக்கடையில் பொருட்கள் வாங்காமலே பொதுமக்கள் கைபேசிக்கு பொருட்கள் வாங்கியதற்கான குறுஞ்செய்திகள் வருவதாக புகார் எழுந்துள்ளது.



இது குறித்து கோவை ஆத்துப்பாலம் பகுதியை சேர்ந்த முகம்மது என்பவர் கூறுகையில், 'எனது குடும்ப அட்டையை பயன்படுத்தி நான் நியாய விலைக்கடையில்  பொருட்கள் வாங்கி வருகிறேன். ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக பொருட்கள் எதுவும் வாங்காமலேயே பொருட்கள் வாங்கிய விபரங்கள் அடங்கிய குறுஞ்செய்தி எனக்கு வருகிறது.

எனது சகோதரர் மற்றும் அண்டை வீட்டாரின் கைபேசிக்கும் இதே போல், பொருட்கள் வாங்குவதற்கு முன்னதாகவே குறுஞ்செய்திகள் வருகின்றன. இது குறித்து சம்மந்தப்பட்ட நியாய விலைக்கடையில் கேள்வி எழுப்பினோம். ஆனால், அவர்கள் எங்களுக்கு சரியான பதில் தரவில்லை. குறுஞ்செய்தி தவறுதலாக வந்திருக்கலாம் எனவும், உங்களால் இயன்றதை பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் பேசி மக்கள் மனதை புண்படுத்துகின்றனர். பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய மானிய பொருட்களை சிலர் கையாடல் செய்கின்றனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வழங்கல் அதிகாரி இந்த பிரச்சனையில் தலையிட்டு ஒரு தீர்வை கொண்டுவர வேண்டும்' இவ்வாறு முகம்மது கூறினார்.

இந்த பிரச்சனை தொடர்பாக மாவட்ட வழங்கல் அலுவலகத்திலுள்ள அதிகாரி ஒருவர் கூறியதாவது :-

பொருட்கள் வாங்காமல் கைபேசிக்கு குறுஞ்செய்தி வருவதாக  எங்களுக்கு எந்த புகார்களும் வரவில்லை.  ஒரே குடும்ப அட்டையில் இரு வேறு கைபேசி எண்கள் தவறுதலாக பதிந்திருக்கும் நேரத்தில் இது போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. அவ்வாறு  தவறுதலாக பதியப்பட்ட கைபேசி எண்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நியாய விலைக்கடைகளின் மீது பல்வேறு புகார்கள் குவிந்துவரும் நிலையில்,  குறுஞ்செய்தி தொடர்பான பிரச்சனை மக்களை சந்தேகமடையச் செய்துள்ளது. இந்த பிரச்சனையில் மாவட்ட வழங்கல் அலுவலர் உடனடியாக தலையிட்டு, கையாடல் நடக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அரசு வழங்கும் மானிய பொருட்கள் முறையாக மக்களை சென்றடைய  வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோவை மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...