கொங்குநாட்டு உணவுகளை சமைத்து அசத்திய கோவை சங்கரா கல்லூரி மாணவர்கள்


கோவை விழாவின் ஒரு பகுதியாக கோவை சங்கரா கல்லூரியில் இன்று கொங்குநாட்டு சமையல் என்ற தலைப்பின் கீழ் மாணவர்களுக்கான சமையல் போட்டி நடைபெற்றது.



சங்கரா கல்லூரியின் சமையல் கலை மற்றும விடுதி மேலாண்மை துறை ஒருங்கிணைத்து நடத்திய இப்போட்டியினை துணை இணைச் செயலாளர் நித்யா ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.



இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு கொங்கு நாட்டின் உணவு வகைகளை சமைப்பதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இப்போட்டியின் போது மாணவர்கள், கடலை லட்டு, கம்பு அல்வா, தங்கப்பால் அல்வா, இளநீர் பாயாசம், பேரிச்சை லட்டு, சிவப்பு அரிசி அல்வா, ராகி சாக்லேட் லட்டு உள்ளிட்ட பல உணவுகளை செய்து அசத்தினர்.



இதைத்தொடர்ந்து, அக்கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் பெர்னார்ட் எட்வர்டு, சமையல் கலை மற்றும் விடுதி மேலாண்மை துறை சமையல் கலை நிபுணர் ஆனந்தராஜ் ஆகிய இருவரும் மாணவர்களால் சமைக்கப்பட்ட உணவுகளை சுவைத்துப்பார்த்து பரிசுப் பொருட்களை வழங்கினர்.



இதில், முதல் பரிசை தருன் என்னும் மாணவர் பெற்றார். இரண்டாம் பரிசை வித்யா மோள் என்பவரும், ராஜேஷ்வரன் என்னும் மாணவர் மூன்றாம் பரிசும் பெற்றனர்.

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கோவை விழா குழுவினர் பரிசுகளை வழங்கி பாராட்டுத்தெரிவித்தனர்.

நிரைவாக துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்டு அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...