கோவையில் தீபா ஆதரவாளர்களால் அகில இந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் அரசியல் கட்சி துவக்கம்


கோவையில் தீபாவின் ஆதரவாளர்கள் இணைந்து அகில இந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் அரசியல் கட்சியை துவக்கினர்.

தமிழகம் முழுவதும் தீபாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவையில் தீபா ஆதரவாளர்கள் இணைந்து அகில இந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் அரசியல் கட்சி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவானந்தாகாலணி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைபாளர் ஜெயபால் பன்னீர் செல்வம் கலந்து கொண்டு கட்சியின் பெயர் மற்றும் கொடியினை அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் பேசிய அவர், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கட்சிக்காக தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பணிகள் நடந்துவருவதாகவும், இளைஞர்கள் ஆர்வமுடன் இந்த கூட்டங்களில் பங்கெடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இது குறித்த தகவல்கள் அனைத்தும் தீபாவுக்கு தெரியப்படுத்தி வருவதாகவும் பன்னீர் செல்வம் அப்போது கூறினார்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...