அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு அரசு கல்லூரிகளில் பணி வழங்குவதை எதிர்த்து அரசு கல்லூரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து ஆசிரியர்கள், ஊழியர்கள் என சுமார் 1000-ம் பேர் தமிழகத்தில் செயல்படும் அரசு கலை கல்லூரிகளில் பணியமர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள 87 அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

தொடர்ந்து, கோவை அரசு கலை கல்லூரி ஆசிரியர்களும், தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தை சேர்ந்தோருமான 50க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இது குறித்து, தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின்  மாநில துணை தலைவர் வீரமணி கூறியதாவது :- 

கடந்த 2008-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து 319 பேர் சமூக நீதிக்கு எதிராக அரசு கல்லூரிகளில் பணியமர்த்தப்பட்டனர். தற்போது அதே நிலை நீடிக்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலைக்கு சேர்ந்த பலர் லஞ்சம் கொடுத்ததன் மூலமாக பணியில் சேர்ந்தவர்கள். அங்கு நிர்வாக முறைகேடு ஏற்படும்போது பல்கலைக்கழகத்தில் உறுப்பு  கல்லூரிகளில் பணியமர்த்துவதை விடுத்து, அரசு கல்லூரிகளில் பணியமர்த்துவது நியாயமற்ற செயல். இதனால், 10 வருடத்திற்க் மேல் அரசு பணிக்காக காத்திருக்கும் பலருக்கு பாதிப்பு ஏற்படும். இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும்.அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...