இந்திய இறுதி நிலை மருத்துவ சிகிச்சை கூட்டமைப்பின் 24வது சர்வதேச கருத்தரங்கம்- 2017

ஜி.கே.என்.எம் மருத்துவமனை ரக்ஷா ஹாஸ்பைஸ் அமைப்புடன் இணைந்து 2001-ம் ஆண்டு முதல் உயர்தரமான இறுதி நிலை மருத்துவ சிகிச்சைகளை கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த நோயாளிகளுக்கு மிகச் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகிறது. ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனன மற்றும் கோவை புற்றுநோய் அறக்கட்டளை நிறுவனம் இணைந்து 24வது சர்வதேச இறுதிநிலை மருத்துவ சிகிச்சை கருத்தரங்கத்தினை கோவை கொடிசியா அரங்கில் பிப்ரவரி 1௦-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடத்துகின்றன. 

பொதுமக்கள் மற்றும் மருத்துவத் துறையின் மத்தியில் இறுதி நிலை மருத்துவ சிகிச்சை மற்றும் அதன் தேவைகள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்துவதே இந்த கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும். புற்றுநோய், இதயம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உள்ள பல்வேறு நுட்பமான தகவல்களை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் இந்த கருத்தரங்கின் வாயிலாக பெற முடியும்.

இந்த மாபெரும் கருத்தரங்கில் 1000-த்திற்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச மருத்துவ நிபுணர்கள் தங்களது அனுபவம் மற்றும் தாங்கள் இத்துறையில் சேகரித்துள்ள அரிய பல தகவல்களை இந்த கருத்தரங்கம் நடைபெறும் மூன்று நாட்களும் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள உள்ளார்கள்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...