டாக்சி ஓட்டுனர்கள் வாடகை கட்டணத்தை அதிகப்படுத்த கோரி அந்நிறுவனத்தின் அலுவலகத்தை முற்றுகை

கோவையில் டாக்சி ஓட்டுனர்கள் வாடகை கட்டணத்தை அதிகப்படுத்தி வழங்க கோரி தனியார் டாக்சி ஓட்டுனர்கள் அண்ணா சிலை அருகில் உள்ள அந்நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்ட்த்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் உபர் என்னும் பெயரில் தனியார் கால் டாக்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கோவையில் இந்த நிறுவனத்துடன் இணைந்து  இரண்டாயிரத்துக்கும் அதிகமான டாக்சி உரிமையாளர்கள் கால் டாக்சி ஓட்டி வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு வழங்கப்படும் வாடகை கட்டணத்தை குறைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும் ஊக்க தொகையையும் குறைத்துள்ளது. இதனை கண்டித்து 100க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் கோவை அண்ணா சிலை அருகில் உள்ள உபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கட்டண மாற்றம் குறித்த தங்கள் முடிவை நிர்வாகம் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும், ஊக்க தொகையை அதிகப்படுத்தி தர வேண்டும் எனவும் உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...