சேலம் ரயில்நிலையத்தில் பயணிகள் உதவி மையம் திறப்பு

சேலம் ரயில் நிலையத்திற்கு வந்து போகும் பயணிகளுக்கு உதவ, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரி சங்கர் வர்மா , சேலம் கோட்ட வணிக ஒருங்கிணைப்பு மேலாளர் விஜுவின் தலைமையில் உதவி வணிகமேலாளர்கள், பயணச்சீட்டு பரிசோதகர்கள், நிலைய மேலாளர்கள், நடைமேடை ஆய்வாளர்கள் கொண்ட குழுவை நியமித்துள்ளார். இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சேலம் ரயில்நிலையத்தில் பயணிகள் உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.  



இந்த உதவி மையங்களில் பயணிகளுக்கு தேவையான ரயில்கள் மற்றும் நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்த தகவல், ரயில்பெட்டிகளின் பராமரிப்பு, கழிப்பறைகள் தூய்மை, உணவு வசதிகள், வீல்சேர் வசதி, போர்ட்டர் வசதி போன்ற அனைத்து உதவிகளும் உடன் வந்து நேரில் செய்து தரப்படும். இது தவிர பயணிகள் ரயில்கள் பற்றிய தகவல் அறிய, சேலம் ரயில் நிலைய நுழைவு வாயில் (சுரங்கப்பாதை இறங்கும் இடத்தின் அருகே) மற்றும் நடைமேடை எண்கள். 3 மற்றும் 4ல் (சுரங்கப்பாதை மேலேறும் இடத்தில்) அமைந்துள்ள இந்த மையங்களின் அருகே தொடுதிரை தகவல் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற பயணிகள் வசதி மையங்கள் விரைவில் சேலம் கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில்நிலையங்களுக்கு விரிவு படுத்தப்படும் என்று வர்மா தெரிவித்தார். 



Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...