இதய தெய்வம் மாளிகையில் தொண்டர்கள் இல்லாமல் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்


கோவையில் இதய தெய்வம் மாளிகையில் அதிக அளவில் தொண்டர்கள் இல்லையென்றாலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலர் சசிகலாவின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியது. இதில் சசிகலா, இளவரசி, சுதாகரன் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 



சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா ஏற்கனவே 21 நாட்கள் சிறையில் இருந்தார். சிறை தண்டனை விதிக்கப்பட்டால் 6 ஆண்டு காலம் தேர்தலில் போட்டியிட முடியாது. சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு ரூ10 கோடி அபராதத்தையும் உறுதி செய்தது குற்றவாளி சசிகலா முதல்வராகும் கனவு தவிடுபொடியானது.



சசிகலா வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து 4 வாரத்தில் பெங்களூர் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டு நீதிபதிகளுமே ஒரே தீர்ப்பு வழங்கினர். உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியதை அடுத்து சென்னை முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் முக்கியமான 20 இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் உஷார் நிலையில் உள்ளனர்.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...