கோவைப்புதூரில் இந்திய அரசின் யுனைட்டேட் வங்கியின் புதிய கிளை திறப்பு


இந்திய அரசின் யுனைட்டேட் வங்கியின்  புதிய கிளை கோவைப்புதூரில் இன்று காலை தொடங்கப்பட்டுள்ளது. இதனை கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வங்கியினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய அரசின் யுனைட்டேட் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி பவன் பஜாஜ் தலைமையேற்று தலைமையுரை ஆற்றினார்.



அப்போது அவர் பேசுகையில்; இந்திய அரசின் யுனைட்டேட் வங்கி பெரும்பாலனவை கிழக்கு பகுதியில் தான் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு ஆகிய பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தூர், ஆக்ரா மற்றும் லூதியான போன்ற நகரங்களிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் தெற்கு பகுதிகளில் பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் புதிய மூன்று கிளைகள் திறக்கப்பட உள்ளது. இந்த வருடம் மட்டும்  இந்தியா  முழுவதிலும் 51 கிளைகள் திறக்கப்பட்டுள்ளது. அதில் 25 சதவீதம் கிளைகள் கிராமப்புறங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பணமதிப்பு இழப்பீட்டிற்கு பிறகு ரூபாய்.10 ஆயிரத்து 500 கோடி வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.  

     

இதில், வங்கியின் பொது துணைமேலாளர் இளங்கோ, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, வங்கியின் கிளை மேலாளர் அரவிந்த் சந்திரசேகர் மற்றும் வங்கி ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...