பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் தெரிந்தால் உடனே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் - கோவை அரசு மருத்துவமனை முதல்வர்


கோவையில் சமீபகாலமாக பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. இது வரை கோவையில் பலர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருந்ததும் அதில் இருவர் மரணமடைந்த சம்பவமும் கோவை மாவட்ட மக்களை பெரும் பீதியடைய செய்துள்ளது.

இந்த நிலையில், பன்றிக்காச்சல் தொடர்பான அறிகுறிகள் தெரிந்தால் உடனே அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோவை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வர் எட்வின்ஜோ தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பன்றிக்காய்ச்சல் என்பது ஒரு சாதாரன காய்ச்சல் தான். இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகள் தெரிந்த உடனே சிகிச்சை பெற்றால் பன்றிக்காய்ச்சலை முழுமையாக குணப்படுத்த முடியும். 

அறிகுறிகள்:-

மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் தொண்டை வலி ஆகிய இரண்டுமே பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் ஆகும். இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை பொதுமக்கள் அணுக வேண்டும்.

ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், ரத்த பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் காய்ச்சல் தீவிர நிலையை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால், உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். 

பாதுகாப்பு முறைகள்:-

இந்த காய்ச்சல் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மையுடையது. தும்மலின் போது இந்த கிருமி நம்மை சுற்றியுள்ள இடங்களில் பரவி விடுகிறது. ஏ.சி. அறைகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு இக்கிருமியின் வீரியம் இருக்கும். அதனால், அடிக்கடி கைகளை சோப்பு கொண்டு கழுவ வேண்டும். அதோடு, தும்மல் அல்லது இருமல் வந்தால் கைக்குட்டைகளை உபயோகிக்க வேண்டும். 

தற்போது, பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட 4 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் ஏற்பட்டவுடன் மருந்து கடைகளுக்கு சென்று தாமாக மாத்திரைகளை வாங்கி உண்ணும் பழக்கத்தை பொதுமக்கள் கைவிட வேண்டும். தாமதிக்கும் நேரத்தில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரை காப்பாற்ற முடியாத நிலையும் ஏற்படும்". இவ்வாறு எட்வின்ஜோ கூறினார்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...