கோவையில் 15 சதவிகித தம்பதியர்களுக்கு குழந்தை பேறின்மைக்கு காரணம் தெரிவதில்லை என நோவா ஃபெர்டிலிட்டி மருத்துவர் தகவல்


கோவையில் 15 சதவிகித தம்பதியர்களுக்கு குழந்தை பேறின்மைக்கு காரணம் தெரிவதில்லை என நோவா ஐவிஐ ஃபெர்டிலிட்டி மருத்துவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-



"விளக்கமுடியாத மகப்பேறின்மை" என்பது காரணம் கண்டறியப்பட முடியாத ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடுகளால் ஏற்படும் குழந்தைப் பெறின்மை ஆகும்.

90 சதவிகித தம்பதியரில் கருத்தரிக்காததற்கான காரணத்தை பரிசோதனைகள் மூலம் ஆணிடமோ, பெண்ணிடமோ குறைபாடுகள் உள்ளதை அறியலாம். சில சமயம் ஆண், பெண் என இருவரிடமும் குறைகள் இருப்பதைக் கண்டறியலாம்.

பொதுவாக குழந்தைப்பேறுக்கு முயற்சிக்கும் தம்பதியருக்கு கருக்குழாய் பரிசோதனை, விந்தணு பரிசோதனை, அல்ட்ரா ஸ்கேன் பரிசோதனை போன்ற பொதுவான பரிசோதனைகள் நடத்தப்படும். இப்பரிசோதனைகளின் மூலம் காரணம் அறியாத நிலையில் அவர்கள் விளக்கமுடியாத மகப்பேறின்மையில் அடக்கப்படுகிறார்கள்.

கோவையில் 10 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரையில் இத்தகைய விளக்க முடியாத குழந்தையின்மை இருப்பது தெரிகிறது. இத்தகைய விளக்க முடியாத மகப்பேறின்மையில் கருமுட்டை, விந்தணு போன்ற அடிப்படை நிலையில் குறைபாடுகள் இருப்பதார் சாதாரண பரிசோதனைகளில் கண்டறியப்பட முடிவதில்லை.

சாதாரணமாகத் தெரியும் விந்தணு, கருமுட்டை கூட கருவாகும் தன்மை அற்றுப் போகலாம். மைக்ரோஸ்கோப்பியில் நன்றாகத் தோன்றும் கரு, கருப்பையில் பொருந்தாமல் போகலாம். இவை சாதாரண பரிசோதனைகளால் கண்டுபிடிக்க முடிவதில்லை.

கருமுட்டை தரம் குறைபாடு, விந்தணு செயல்திறன் குறை, கருப்பை இருந்தும் ஒட்டாமல் இருக்கும் தருணம்போல கண்டறிய முடியாத மகப்பேறின்மைக்கு IVF தொழில்நுட்பம் ஒரு சிறந்த வழியாகும்.

விளக்கமுடியாத மகப்பேறின்மை கொண்டோர் பல பரிசோதனைகள் மேற்கொண்டும் சிகிச்சை பலனின்றி விரக்தியில் இருக்கும நிலையில் IVF சிகிச்சை முறையில் கருவுற்றவுடன் பெருமகிழ்ச்சி அடைவர் என தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...