தமிழக வறச்சியைப் போக்க தாகம் தீரக்கும் தாமரை யாத்திரை பா.ஜ.க. சார்பில் நடைபெறும் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கோவையில் பேட்டி.

தமிழகம் முழுவதும் வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள குளங்கள், குட்டைகள் போன்றவை தூர்வாரப்பட வேண்டும், வருங்காலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மரங்களை நடுவதை கோரிக்கையாக பாரதீய ஜனதா கட்சி முன் வைத்து 10 ஆயிரம் மர கன்றுகளை 5 நாள் யாத்திரையில் நட உள்ளதாகவும், பா.ஜ.க.வின் மத்திய தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்திரராஜன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் வருகின்ற மார்ச் 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மர கன்றுகள் நட யாத்திரை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.



மேலும் சிறுவாணி அணை தூர்வாரப்படவில்லை எனவும், 40 சதவீதம் சேரும், சகதியாக உள்ளதாகவும் கேரளா அரசின் அனுமதிப்பெற்று  அதற்கு நிதியை தமிழக அரசு ஒதுக்கி உடனடியாக தூர்வாரப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். கேரளாவில் உள்ளது போல் தமிழகத்திலும் நீர் நிலைகளை தூர்வாரி மழை காலங்களில் தண்ணீர் சேமித்து வைக்க நீர் சாரணலாம் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். கோவை மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் நடைபெற்ற பேட்டியின் போது கோட்ட பொறுப்பாளர் ஜி.கே.செல்வகுமார், மாநில செயலாளர் நந்தகுமார், மாவட்ட தலைவர் நந்தகுமார் மற்றும கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...