மு.க ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து கோவையில் திமுகவினர் போராட்டம்

தமிழக சட்டசபையில் இன்று திமுக எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் அவைக்காவலர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து கோவையில் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் சபாநாயகர் அதை நிராகரித்துவிட்ததால், சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இதனால் திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இதில் திமுக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வில் பலர் தாக்கப்பட்டனர். இதனை கண்டித்து மு.க ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தி வருகிறார். இதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் ஒருபகுதியாக, கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோயமுத்தூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கோவை திமுக இளைஞர் அணி சார்பில் கோட்டை அப்பாஸ் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் தனபாலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதேபோல், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் 100க்கும் மேற்பட்ட திமுகவை சேர்ந்த தொண்டர்கள் தனபாலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...