சட்டமன்றத்தில் ஒவ்வொரு நாளும் சோதனைகளை சந்தித்து தான் பொறுப்பை நீடிக்க முடியுமென சிபிஐ மூத்த தலைவர் தா.பாண்டியன் பேட்டி


தமிழக சட்டமன்றத்திற்கு நித்ய கண்ட பூர்ணாயிச்சு தான் எனவும், ஒவ்வொரு நாளும் சோதனைகளை சந்தித்து தான் பொறுப்பை நீடிக்க முடியுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கோவையை அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சூலூர் வட்டார மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன், தற்போது தமிழகத்தில் நடக்கும் சம்பவங்கள் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய பாஜக அரசினால் நடத்தப்படுபவை என குற்றம்சாட்டினார்.

முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு தற்போது சட்டமன்றத்தின் உள்ளே இருப்பவர்களுக்கு இல்லை எனவும், தற்போது முதலமைச்சர் பொறுப்பு என்பது மலர்கீரிடம் அல்ல, அது முட்கீரிடம் எனவும் அவர் கூறினார்.

மேலும், இனிமே தமிழக சட்டமன்றத்திற்கு நித்ய கண்ட பூர்ணாயிச்சு தான் எனவும், ஒவ்வொரு நாளும் சோதனைகளை சந்தித்து தான் பொறுப்பை நீடிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது உடல் வலிமையின் பலத்தை காட்டக்கூடாது எனவும், தங்களுக்கு சட்டப்படி வழங்கப்பட்ட வாக்குரிமையை மட்டுமே பயன்படுத்தி இருக்க வேண்டுமெனவும் கூறிய அவர், ரகசிய வாக்கெடுப்பு என்று இல்லாமால் எப்படி வாக்கெடுப்பு நடத்தியிருந்தாலும் அந்தந்த கட்சிக்கு உள்ள பலம் தான் நிருபீக்கப்பட்டு இருக்குமெனவும் தெரிவித்தார். மேலும், எதிர்கட்சிகள் இல்லாமல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு செல்லாது என சொல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்தார். 

முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி மக்கள் நலனை தவிர தனக்கு எதுவும் இல்லை என நற்பெயர் எடுப்பதே தனது நோக்கம் எனவும், பணம் சேர்ப்பது அல்ல என மக்களை திருப்தி படுத்தும் வகையில் செயல்பட வேண்டுமெனவும், முதலமைச்சர் அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தா.பாண்டியன் தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...