ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழாவில் தொண்டர்களை அலறியடித்து ஓட வைத்த அதிமுக நிர்வாகிகள்

வால்பாறையில் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழாவின் போது அதில் பங்கேற்றிருந்த அதிமுகவினரிடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தொண்டர் அலறியடித்து ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வால்பாறையில் அதிமுக சார்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாள் விழா தனியார் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.



இவ்விழாவிற்கு நகர கழக செயலாளர் மயில் கணேஷ் தலைமை வகித்தார். பொன்.கணேஷ் வரவேற்புரை ஆற்றினார். வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, விவசாய அணி துணைச்செயலாளர் வழக்கறிஞர் சீதாராமன், ஜெபராஜ், அமீது ஆகியோர்கள் சிறப்புரை ஆற்றினர்.

இதைத்தொடர்ந்து ஜெபராஜ் பேசுகையில் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கேரளாவிற்கு இணையாக 301 ரூபாய் சம்பளம் பெற்றுத்தர வேண்டும் என்று சட்ட மன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசுவிடம் கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து அமீது பேசுகையில், முன்னால் பேசிய பொன் கணேசும், ஜெபராஜும் பேசியது தவறு என்று சுட்டிக்காட்டினார். இதைத்தொடர்ந்து, நாங்கள் என்ன தவறாக பேசினோம் என்று இருதரப்பினர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



இதில் நாற்காலிகளை தூக்கி எறிந்து மோதல் ஏற்பட்டதால் தொண்டர்கள் அலறியடித்து ஓடினர். சில மணிநேரம் கழித்து மீண்டும் கூட்டம் துவங்கியது. 

இதில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில், தமிழகத்தில் நிலையான அரசு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நாங்கள் கூவத்தூர் தனியார் விடுதியில் தங்கியிருந்து 122 சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தோம்.

இனி வரும் காலங்களில் ஜெயலலிதாவின் வழியிலேயே பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படும். வால்பாறை சட்டமன்ற தொகுதியில் 250 பேருக்கு ஒருவாரத்தில் இலவச பட்டா வழங்கி அரசு மாணியத்தில் வீடு கட்டித்தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கேரளாவுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் போல செயல்பட வேண்டும்" என்று தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த விழாவில் நரசப்பன், வழக்கறிஞர் பெருமாள், கோழிக்கடை சண்முகம், மிச்சர் முருகன், சசி, மோகன், செல்வகணேஷ், நெல்லைச்செல்வன் ஆகியோர்களும் கட்சி தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையி...

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருப்பூரில் சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு..!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சே...

சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி...

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...