ரயில்வே நடைபாதை இடத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு

கோவை, ரயில் நிலையம் வளாகம் ரயில் பாதை அருகே உள்ள 17-வது வார்டு, கடலைக்கார சந்து 3-வது வீதி இந்திரா நகரில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் 50 குடியிருப்புகளும், 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்கள் அரசாங்க அடையாள அட்டைகள் உள்ளிட்ட வரி செலுத்துவதற்கான அனைத்தையும் வைத்துள்ளனர்.

இந்நிலையில், ரயில் நடைபாதை விரிவுபடுத்த அப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற ரயில்வே நிர்வாகம் சார்பில் கடந்த ஜனவரி மாதம் இறுதி நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றுவதற்கு வந்தபோது, அப்பகுதி குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், சேலம் கோட்ட ரயில்வே உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், 15 நாட்கள் ரயில்வேயிடம் கால அவகாசம் கேட்டு அதற்கான கடிதமும் எழுதி கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை தற்காலிகமாக ரயில்வே அதிகாரிகள் நிறுத்தினர். 

அதனைத் தொடர்ந்து, இன்று தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூனன் முயற்சியில் 72-வது வார்டு பகுதியில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளலூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இவர்கள் வசிப்பதற்கான இருப்பிட உரிமைச் சான்றிதழ்களை 48 குடும்பங்களுக்கு வழங்கினார். உடன், குடிசை மாற்றுவாரியம் மண்டல பொறியாளர் ராஜசேகரன், கவுன்சிலர் சசிரேகா ஆகியோர் உள்ளனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...