தாழ்த்தப்பட்டவர் மட்டுமே துப்புரவு பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற அரசாணையை எரித்து தாபெதிக போராட்டம்

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் துப்புரவு பணியிடங்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் விண்னப்பிக்க வேண்டும் என்ற அரசானையை கண்டித்து கோவையில் அரசானை நகலை எரித்து போராட்டம் மேற்கொண்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் காலியாக உள்ள 20 துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என சமீபத்தில் அரசானை வெளியிடப்பட்டது. இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் எதிப்பு தெரிவித்துள்ளது.மேலும் இந்த அரசானை குலத்தொழிலுக்கு வழி வகுக்கும் என தெரிவித்து, அரசானை நகலை எரிக்கும் போராட்டம் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு நடைபெற்றது.

கழக அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பினர் தொடர்ந்து போராட்டத்தின் போது அரசானையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை போலிசார் கைது செய்தனர். இது குறித்து அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி கூறுகையில் தாழ்த்தப்பட்ட மக்களை குலத்தொழிலுக்கு திரும்ப அழைக்கும் வகையில் இந்த அரசானை உள்ளதாகவும், இது திரும்ப பெறும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...