கோவை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவைகள் குறைப்பு

கோவை, சென்னை இடையே இயக்கப்படும் 3 விமானங்கள், கோவை, ஹைதராபாத் இடையே இயக்கப்படும் 2 விமானங்கள் மற்றும் கோவை, பெங்களூர் இடையே இயக்கப்படும் 1 விமானம் ஆகியவற்றின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவை விமான நிலையத்திலிருந்து 27 உள்நாட்டு விமான சேவைகளும், 2 சர்வதேச விமான சேவைகளும் வழங்க முடியும் என்ற நிலையில் சமீப காலமாக விமான சேவைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (DGCA) உத்தரவின்படி தனியார் விமான நிறுவனமான இண்டிகோவின் 30 விமான சேவைகள் நாடு முழுவதும் அண்மையில் நிறுத்தப்பட்டது. இதில் இண்டிகோ கோவைக்கு வழங்கிய 6 சேவைகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

கோவை, சென்னை இடையே இயக்கப்படும் 3 விமானங்கள், கோவை, ஹைதராபாத் இடையே இயக்கப்படும் 2 விமானங்கள் மற்றும் கோவை, பெங்களூர் இடையே இயக்கப்படும் 1 விமானம் ஆகியவற்றின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இம்மாதம் 4 ஆம் தேதி முதல் இந்த சேவை குறைப்பு துவங்கிய நிலையில் இதன் காரணமாக கோவையில் இருந்து இப்பகுதிகளுக்கு விமானம் வழியே செல்வது பயணிகளுக்கு சவாலாக இருக்கிறது. விமான சேவைகளுக்கான டிமாண்ட் அதிகரிக்க டிக்கெட் கட்டணமும் பெருமளவு உயர்ந்திருக்கிறது.

இதனால் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் இந்த உத்தரவை அறிவித்திருக்கிறது என்பது முழுமையாக இன்னும் வெளிவரவில்லை என்றாலும் தகவல்களின்படி இண்டிகோ வைத்துள்ள A320 என்ற வகை விமானங்களில் ஏற்பட்ட சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இந்த விமான சேவைகள் நிறுத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

அதேபோல இண்டிகோ நிறுவனம் தனது A320வகை விமானத்திற்கு மாற்றாக சில இடங்களில் ATR இனம் மற்றொரு வகை விமானத்தை அறிமுகப்படுத்தவும் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இண்டிகோ விமான நிறுவனத்தில் A320 ரக விமானங்களே அதிகம் உள்ளது என்பதும், 2023ல் தனது விமானங்களில் எரிபொருளை 6 கிலோ வரை மிச்சப்படுத்துவதற்காக Flap - 3 landing எனும் அபாயகரமான தரையிறங்கும் முறையை பின்பற்ற தனது பைலட்டுகளுக்கு பரிந்துரைத்து, அதை பின்பற்ற வைத்ததற்காக அந்த நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...