கோவையில் இருந்து அயோத்தி ராமர் கோவில் வரை இருசக்கர வாகனத்தில் செல்ல காவல்துறை அனுமதி மறுப்பு

கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்லவும், இஸ்லாமியர்கள் மெக்கா செல்லவும் அனுமதி கொடுக்கும் அரசு ஏன் அயோத்தி ராமர் கோவில் செல்ல அனுமதி கொடுப்பதில்லை என கோவை பாஜக விருந்தோம்பல் குழுவின் மாவட்ட துணைத் தலைவர் இந்துஜா காஞ்சி கேள்வி எழுப்பினார்.


கோவை: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கோவை பாஜக விருந்தோம்பல் குழுவின் மாவட்ட துணைத் தலைவராக உள்ள இந்துஜா காஞ்சி என்பவர் இருசக்கர வாகனத்தில் கோவை ராம்நகர் பகுதியில் உள்ள ராமர் கோவில் இருந்து அயோத்தி ராமர் கோவில் வரை கிட்டத்தட்ட 2500 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ள இருந்தார்.



இந்த நிலையில் கோவில் முன்பாக நின்று கொண்டிருந்த காவல்துறை இருசக்கர வாகனத்தில் செல்ல அனுமதி இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்துஜா காஞ்சி கூறும் பொழுது கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்லவும், இஸ்லாமியர்கள் மெக்கா செல்லவும் அனுமதி கொடுக்கும் அரசு ஏன் எங்களுக்கு கொடுப்பதில்லை என கேள்வி எழுப்பினார்.



இந்த பிரச்சனையில், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார். அனுமதி கடிதம் கொடுத்தவுடன் பரிசீலனை செய்யப்படும் எனவும், பாதுகாப்பு கருதி இருசக்கர வாகனத்தில் செல்ல அனுமதி இல்லை என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...