காங்கேயம் அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

நெய்க்காரன் பாளையம், ஆலம்பாடி, சகாயபுரம், கலைஞர் நகர், நத்த காட்டு வலசு, வரப்பாளையம், சந்தியா நகர், காடையூர், சிவன்மலை, படியூர், நத்தக்காடையூர் ஆகிய பகுதிகளில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாநகர் மாவட்டம், காங்கேயம் ஒன்றிய அதிமுக கழகம் சார்பில் முன்னாள் முதல்வர், பாரத ரத்னா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.



காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றிய கழகச் செயலாளருமான என்.எஸ்.என் நடராஜ் தலைமையில் 10 மேற்பட்ட ஊராட்சி பகுதிகளில் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழக கொடிக்கம்பங்களில் கொடியேற்றி, எம்ஜிஆர் அவர்களின் திரு உருவப்படங்களுக்கு மலர் தூவி மாலை அணிவித்தும், பொங்கல் வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டும் கொண்டாடி வருகின்றனர்.

இதில் காங்கேயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்க்காரன் பாளையம், ஆலம்பாடி, சகாயபுரம், கலைஞர் நகர், நத்த காட்டு வலசு, வரப்பாளையம், சந்தியா நகர், காடையூர், சிவன்மலை, படியூர், நத்தக்காடையூர் ஆகிய பகுதிகள் ஆகும். முதலில் நெய்க்காரன்பாளையத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் மாவட்ட கழக துணை செயலாளர் லட்சுமி சோமசுந்தரம், ஒன்றிய கழக துணை செயலாளர் திருச்செந்தில், காமாட்சிபுரம் மணி, லோகேஸ்வரன் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

மேலும் எம்ஜிஆரின் சிறப்புக்கள் குறித்தும் அவர் நடித்த படங்களின் பாடல்கள் வரிக்குறித்தும் சிறப்பாக எடுத்துக்கூறப்பட்டது. புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா அவர்கள் வழியில் 4 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தவர் நமது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் எனவும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் சிறப்பாக செயற்படுகின்றார் எனவும், மீண்டும் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் எப்போது ஆட்சி அமையும், அதில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் அரியணையில் ஏறுவார் என பொதுமக்கள் காத்திருக்கின்றனர் என காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ் தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...