ஊத்துகாடு ரோட்டில் உள்ள விநாயகர் கோவிலை அகற்ற எதிர்ப்பு - நகராட்சி ஆணையர் முற்றுகை

சாலையை ஆக்கிரமித்து கட்டியுள்ளதாக விநாயகர் கோவிலை அகற்ற உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது சம்பந்தமாக விசாரித்த உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் 15 தினங்களுக்குள் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் கோவிலை அகற்ற வேண்டும் என தீர்ப்பு அளித்துள்ளது.


கோவை: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட ஊத்துகாடு ரோட்டில் உள்ள விநாயகர் கோவில் அகற்றாவிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதை திரும்ப பெற கோரி எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுகவினர் நகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்காடு ரோடு நல்லிக்கவுண்டர் லே அவுட் சந்திப்பில் சாலையை ஆக்கிரமித்து கட்டியுள்ளதாக விநாயகர் கோவிலை அகற்ற உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது சம்பந்தமாக விசாரித்த உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் 15 தினங்களுக்குள் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் கோவிலை அகற்ற வேண்டும் என தீர்ப்பு அளித்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகம் சார்பில் கோவிலை அகற்றக்கோரி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.



அந்த நோட்டீஸில் 15 தினங்களுக்குள் கோவிலை அகற்றாவிட்டால் மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறப்பட்டிருந்ததை கண்டித்து இன்று பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில், ஊத்துக்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் சுப்பையாவை சந்தித்து விநாயகர் கோவிலை அகற்ற கோரிய நோட்டீசை திரும்ப பெற வலியுறுத்தி மனு அளித்தனர்.



மேலும் ஒரு சில ஆளுங்கட்சியினர் தூண்டுதலால் இது போன்ற நடவடிக்கை யில் ஈடுபடுவதை நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் கைவிட வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடப்பதாகவும், பல ஆண்டுகளாக பொதுமக்கள் வழிபட்டு வரும் விநாயகர் கோவிலை இடிக்க கூடாது, தொடர்ந்து அதிகாரிகள் இது போன்ற செயலில் ஈடுபட்டால் அதிமுக சார்பில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...