புதிய மோட்டார் வாகனம் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பொள்ளாச்சியில் வாகன ஓட்டுனர் கண்டன ஆர்ப்பாட்டம்

இலகு ரக, கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள ஓட்டுநர்களுக்கு இயற்கை மரணம் ஏற்பட்டால் 3 லட்சம் ரூபாயும், விபத்தில் மரணம் ஏற்பட்டால் 5 லட்சம் ரூபாயும், தனிநபர் காப்பீடு மாநில அரசு வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


கோவை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஹிட் & ரன் BNS என்ற வழக்கை பதிவு செய்து அந்த ஓட்டுநருக்கு 7 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் அனைத்து வாகன ஓட்டுனர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மாநிலத் தலைவர் காளிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இலகு ரக, கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள ஓட்டுநர்களுக்கு இயற்கை மரணம் ஏற்பட்டால் 3 லட்சம் ரூபாயும், விபத்தில் மரணம் ஏற்பட்டால் 5 லட்சம் ரூபாயும், தனிநபர் காப்பீடு மாநில அரசு வழங்க வேண்டும், பணியில் இருக்கும் ஓட்டுநர்களை தாக்கும் நபர் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வதோடு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை வழங்க சட்டம் இயற்ற வேண்டும், வெளிமாநிலம் சென்று வரும் ஓட்டுநர்களுக்கு வழிப்பறி கொள்ளையர்களால் உயிர் சேதம் ஏற்பட்டாலோ விபத்து மூலம் உயிர் சேதம் ஏற்பட்டாலோ எந்த மாநிலத்தில் நடக்கிறதோ அம்மாநில அரசு ஓட்டுநரின் உடலை அவரது சொந்த ஊரில் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டன.



மேலும் விபத்து ஏற்பட்டவுடன் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஓட்டுநர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அங்குள்ள ஓட்டுநர்களின் உயிருக்கு யார் உத்தரவாதம் அளிப்பது, காவல் நிலையத்திற்கு ஓட்டுனர்கள் செல்லும் போது இந்த சட்டத்தை பயன்படுத்தி சில காவல்துறையினர் ஓட்டுநர்களிடம் லட்சக்கணக்கில் கையூட்டு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதனால் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் ஓட்டுநர்கள் மாற்று தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும், தமிழக அரசு ஓட்டுநர்களுக்கு தனி நலவாரியம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...