கோவை கலிக்கநாயக்கன்பாளையத்தில் லஞ்சம் வாங்கிய காவலர் ஆயுதப் படைக்கு மாற்றம்

பொங்கல் விழாவில் பாதுகாப்புப் பணியில் இருந்த தொண்டாமுத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் மணிகண்டன் என்பவா் மேடையில் இருந்த ஒருவரை அழைத்து விழாவின் பாதுகாப்புக்கு வந்துள்ள தனக்கு ரூ.1,000 வழங்க வேண்டும் என்று கேட்டு வாங்கியதால், அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


கோவை: கோவை கலிக்கநாயக்கன்பாளையத்தில் அப்பகுதி மக்கள் சார்பில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு பொங்கல் விழா மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தொண்டாமுத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலா் மணிகண்டன் என்பவா் மேடையில் இருந்த ஒருவரை அழைத்து விழாவின் பாதுகாப்புக்கு வந்துள்ள தனக்கு ரூ.1,000 வழங்க வேண்டும் என்று கேட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, காவலா் மணிகண்டன் கேட்ட ரூ.1,000ஐ பொதுமக்கள் வழங்கினா். இதை அங்கிருந்த ஒருவா் கைப்பேசியில் விடியோ எடுத்துள்ளார். இதைத் தொடா்ந்து, மணிகண்டன் லஞ்சம் வாங்கிய விடியோ ஆதாரங்களுடன் அப்பகுதி மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை நேற்று (ஜன.20) புகார் மனு அளித்தனர்.

அப்போது, அங்கிருந்த காவல் துறை அதிகாரிகள், தலைமைக் காவலர் மணிகண்டனை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து ஏற்கெனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறினர். அவா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்களிடமிருந்த விடியோ ஆதாரத்தை போலீஸாரிடம் வழங்கிவிட்டுச் சென்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...