வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 25 வது பட்டமளிப்பு விழா

தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், பயோமெடிக்கல் இன்ஜினியரிங் மற்றும் ஏரோனாடிகள் இன்ஜினியரிங் ஆகிய துறைகளை சேர்ந்த 549 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.


கோவை: கோவை துடியலூரை அடுத்த வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 25 வது பட்டமளிப்பு விழா 2 நாட்கள் நடைபெற்றது.



இதில் 1094 மாணவ மாணவிகள் பட்டங்களை பெற்றனர்.



கோவை துடியலூரை அடுத்த வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 25 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் N.R.அலமேலு அனைவரையும் வரவேற்றார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி தலைமை தாங்கினார்.

முதலாம் நாள் விழாவில், பெங்களூரு, எல் & டி டெக்னாலஜி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்த தலைமை தொழில்நுட்ப அதிகாரிஆஷிஷ் ஹுஷு, சிறப்பு விருந்திராக கலந்துகொண்டு தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், பயோமெடிக்கல் இன்ஜினியரிங் மற்றும் ஏரோனாடிகள் இன்ஜினியரிங் ஆகிய துறைகளை சேர்ந்த 549 பேருக்கு பட்டம் வழங்கினர்.

மேலும் அவர் பேசும்போது, பட்டம் பெற்று சிறந்த நிறுவனங்களில் பணிபுரியும் போது நம் கண்முன்னே பறந்து விரிந்து கிடைக்கும் வாய்ப்புகளை திறன்பட உணர்ந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் பணிபுரிந்தால் நம் நாட்டின் பொருளாதாரம் 20 முதல் 40 சதவீதம் மேம்பாட்டிற்கும் என்பதை உறுதிப்படக் கூறினார்.



இரண்டாம் நாள் நடைபெற்ற விழாவிற்கு இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தின் ஏர்பஸ் இன்னோவேஷன் சென்டர் நிறுவனத்தின் செயல்பாட்டுத் தலைவர் ராமநாதன் ஸ்ரீனிவாசன், சிறப்பு விருந்திராக கலந்துகொண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், மற்றும் எம். பி. ஏ, துறையை சேர்ந்த 545 மாணவ மாணவியருக்கு பட்டம் வழங்கினார். மேலும் துறைகளின் சார்பில் முதல் மதிப்பெண் பெற்ற 10 பேருக்கு தங்கப்பதக்கங்களும் சிறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

விழாவில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், துணை முதல்வர் ப கருப்புசாமி, துறை தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...