வீடுகளில் தீபங்களை ஏற்றி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை கொண்டாடுவோம் - வானதி சீனிவாசன் வேண்டுகோள்

நாம் கார்த்திகை தீபத்தன்று நூற்றுக்கணக்கான தீபங்களை ஏற்றி கொண்டாடுவது போல இந்த தீபங்களை ஏற்றி நாம் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை கொண்டாடுவோம் என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள ராம பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகம் ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வை பார்ப்பதற்காக ஏற்பாடுகள், அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதை நேற்று முதல் தமிழக அரசு காவல்துறை வாயிலாக மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்காக ராம பக்தர்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி மகளிர்களுக்கு மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

அதன்படி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ராமர் கோயில் கும்பாபிஷேக நாளிலே அனைவரது வீட்டிலும் விளக்கேற்றி கொண்டாட சொல்லி இருக்கிறார். தமிழக அரசு, பக்தர்களின் உணர்வுகளை மதிக்காமல் இவ்வாறு மிரட்டுகின்ற பொழுது, நாம் அனைவரும் நமது ராம பக்தியை காட்டுவதை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.

அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் 5 விளக்குகளை ஏற்றச் சொல்லி இருக்கிறார் பிரதமர். நாம் கார்த்திகை தீபத்தன்று நூற்றுக்கணக்கான தீபங்களை ஏற்றி கொண்டாடுவது போல இந்த தீபங்களை ஏற்றி நாம் கொண்டாடுவோம் என்று கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...