சின்னியகவுண்டம்பாளையத்தில் போர்ஜரி போக்குவரத்தில் ஈடுபட்ட லாரி ஓனர்- விபத்தால் ஏற்பட்ட விபரீதம்

விபத்தில் சிக்கிய லாரியின் எண்ணும், அங்குவந்த மற்றொரு லாரியின் எண்ணும் ஒரே மாதிரியாக இருப்பதை பார்த்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த பல்லடம் போலீசார் இரண்டு லாரிகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செட்டிபாளையம் சாலையில் உள்ள சின்னியகவுண்டம்பாளையம் பகுதியில் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி இரும்பு கம்பெனி கருமண்ணை ஏற்றுக் கொண்டு சென்ற லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிகாலையில் பள்ளத்தில் இறங்கியது.

அப்போது இதை அறிந்த லாரி உரிமையாளரான பல்லடம் பகுதியை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் மற்றொரு லாரியுடன் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது அதே எண் கொண்ட ஓனர் எடுத்து வந்த லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு அவர் இறங்கி விபத்தை பார்த்த போது இதனை கண்ட அப்பகுதி மக்கள் இந்த ஒரே எண்ணில் இரண்டு லாரிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து அதை தொடர்ந்து இரண்டு லாரிகளையும் கைப்பற்றிய பல்லடம் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த லாரியை திண்டுக்கல்லை சேர்ந்த அந்தோணி திரவியம் ஆரோக்கியம் என்ற 33 வயது நபர் ஓட்டி வந்தது குறிப்பிடத்தக்கது. சாலையோர பள்ளத்தில் இறங்கியதால் யாருக்கும் எவ்வித பாதிப்பு இன்றி இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...