சாமளாபுரத்தில் தனியார் பள்ளியில் நிர்வாக பிரச்சனை – கல்வி பாதிக்கப்படுவதாக கூறி பெற்றோர்கள் சாலை மறியல்

சில நாட்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கும் சூழ்நிலையில் பள்ளி நிர்வாகத்தை மாற்றினால் மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகும். எனவே பள்ளி நிர்வாகத்தை மாற்ற வேண்டாம் என்று கூறி பெற்றோர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சாமளாபுரம் அருகே தனியார் (லிட்ரசி) பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 3000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி அறங்காவலர் குழு செயலாளரான ராமமூர்த்தி என்பவர் பள்ளி நிர்வாகத்தை நடத்தி வருகின்றார். அறங்காவலர் குழுவில் உறுப்பினராக இருந்த செந்தில்குமார் மற்றும் சில உறுப்பினர்களை சில மாதங்களுக்கு முன்பு குழுவில் இருந்து நீக்கியுள்ளனர்.

நீக்கப்பட்டவர்கள் இது குறித்து நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு வந்த செந்தில்குமார் தரப்பினர் நீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பு வந்து விட்டதாகவும், இனிமேல் பள்ளி நிர்வாகத்தை தாங்கள் நடத்த போவதாகவும்,பள்ளியை விட்டு ராமமூர்த்தியை வெளியேறுமாறும் கூறியுள்ளனர்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மங்கலம் காவல் நிலையத்தில் செந்தில்குமார் தரப்பினர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு தரப்புக்கும் இடையே நடைபெறும் பிரச்சினையால் மாணவர்கள் கல்வி பாதிப்பதாக கூறி பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பள்ளி தாளாளர் ராமமூர்த்தி வெளியேற வேண்டாம் என கூறி மாணவர்களும் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்னும் சில நாட்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கும் சூழ்நிலையில் பள்ளி நிர்வாகத்தை மாற்றினால் மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகும். எனவே பள்ளி நிர்வாகத்தை மாற்ற வேண்டாம் என்று கூறி பெற்றோர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த பல்லடம் டிஎஸ்பி விஜயகுமார், மங்கலம் போலீசார், மாவட்ட கல்வி அலுவலர் பெற் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தேர்வு நெருங்கி வரும் சூழ்நிலையில் பள்ளி நிர்வாகம் மாறினால் ஆசிரியர்கள் மாற்றப்படுவார்கள். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழ்நிலை உருவாகும் என பெற்றோர்களும், மாணவர்களும் தெரிவித்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்ததை தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...