தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உடுமலையில் நாடமாடும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாகனங்கள் தொடக்கம்

நடமாடும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் மற்றும் அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் விழிப்புணர்வு பாடல்கள் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்படும் என வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்களுக்கு வாக்களிப்பது முக்கியத்துவம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு குறித்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் விழிப்புணர்வு வாகனம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி என இரண்டு வாகனங்களை உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் துவக்கி வைத்தார்.

நடமாடும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் மற்றும் அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் விழிப்புணர்வு பாடல்கள் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்படும். வாக்களிப்பது குறித்து மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து வாகனத்தில் இருக்கும் வருவாய் துறையினர் விளக்கம் அளிப்பார்கள் என உடுமலை வருகை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தெரிவித்தார்.

உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடமாடும் மின்னணு வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாகனம் துவக்க நிகழ்வில் உடுமலை வட்டாட்சியர் சுந்தரம் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...