கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நாட்டின் 75-ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம்

இளைஞர் நலமே, வலிமையான இந்தியா' என்பதை மெய்ப்பிக்கின்ற வகையில், இளைஞர்கள் உடலாலும், உள்ளத்தாலும், அறிவாலும், ஆளுமையாலும் திறன்பெற்றுத் திகழவேண்டும் என்று கற்பகம் கல்விக்குழுமத்தின் பதிவாளர் முனைவர் ரவி பேசினார்.


கோவை: கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் டாக்டர். இராச. வசந்தகுமார் அவர்கள் விழாவில் தேசியக்கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மரக்கன்றுகளை வழங்கினார்.



பதிவாளர் முனைவர் சு.இரவி அவர்கள், குடியரசுதின விழா பேருரை ஆற்றினார். '



பழமையான குடியரசு நாடாகிய இந்தியாவின் தனித் தன்மையைக் காப்பதில் இளைஞர்களின் பங்கு அளப்பரியது. நாளும் பல புதிய செயற்கைக்கோள்களை ஏவுதல் முதலான பல தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா முன்னோடியாகத் திகழ்கிறது. அத்தகைய உயர்வை என்றும் நிலைநிறுத்த இளைஞர்களின் சமுதாயப் பொறுப்புணர்வும், பொதுநல உழைப்பும் தேவை.

அனைத்து துறைகளிலும் நாட்டை வலிமையாக்க, இளைஞர் நலன் நாளும் மேம்பட வேண்டும். இளைஞர் நலமே, வலிமையான இந்தியா' என்பதை மெய்ப்பிக்கின்ற வகையில், இளைஞர்கள் உடலாலும், உள்ளத்தாலும், அறிவாலும், ஆளுமையாலும் திறன்பெற்றுத் திகழவேண்டும்' என்றார்.

தேசிய மாணவர்ப்படை வீரர்களும், கேப்டன் சிறீதரன் ‌அவர்களும் விழாவில் பாராட்டுப் பெற்றனர். விழாவில் கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலர் க. முருகையா, தேர்வாணையர் முனைவர் ப.பழனிவேலு, முதன்மையர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...