கோட்டமங்கலம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் திமுக ஊராட்சி மன்ற தலைவருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, சட்டத்திற்கு புறம்பாக அருகில் உள்ள ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் முறையாக அகற்றப்படும் என்பன உட்பட 22 தீர்மானங்கள் கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கோட்டமங்கலம் ஊராட்சியில் திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம் தலைமையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



அப்போது ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அருகில் உள்ள ஊராட்சிகளுக்கு சட்ட விரோதமாக குடிநீர் இணைப்பு வழங்கி இருப்பது மற்றும் தெருவிளக்கு பராமரிப்பதில் அலட்சியம், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முறைகேட்டில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக கூறி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



மேலும் கிராம சபை கூட்டத்திற்கு குறைந்தபட்சம் 100 பேர் இருக்க வேண்டிய நிலையில் குறைந்த அளவு பொதுமக்களை வைத்து கிராமசபை கூட்டத்தை நடத்தக்கூடாது என பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இறுதியாக சட்டத்திற்கு புறம்பாக அருகில் உள்ள ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் முறையாக அகற்றப்படும் என்பன உட்பட 22 தீர்மானங்கள் கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கிராம சபை கூட்டத்தில் குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...