வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்முனைவோர் முகாம் துவக்க விழா

தமிழ்நாட்டில் உள்ள ஒரே நோடல் மையமான ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இந்தியாவில் உள்ள 10 மையங்களில் ஒன்றாகும். இந்த முகாம் நேற்று( ஜனவரி 29ம் தேதி) தொடங்கி, பிப்ரவரி 2ம் தேதி வரை நடக்கிறது. இதில், ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பகுதிகளில் இருந்து 300 மாணவர்கள் முகாமில் பங்கேற்கின்றனர்.


கோவை: கோவை துடியலூரை அடுத்த வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 5 நாட்கள் நடைபெறும் புதுமை கண்டுபிடிப்பு, வடிவமைப்பு மற்றும் தொழில்முனைவோர் முகாம் துவக்க விழா நடைபெற்றது.



விழாவில் கல்லூரியின் துணை முதல்வர் ப.கருப்புசாமி அனைவரையும் வரவேற்றார். முதல்வர் முனைவர் N.R.அலமேலு தலைமை தாங்கி பேசினார். ஏ.ஐ.சி.டி.இ.யின் தலைவர் பேராசிரியர். டி.ஜி. சீத்தாராம், ஏஐசிடிஇ தலைமையகம், புது தில்லியில் இருந்து மெய்நிகர் முறையில் துவக்கி வைக்கப்பட்டு நிகழ்வுகள் அனைத்தும் சமூக ஊடக தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

கல்வி அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் கல்வி அமைச்சகத்தின் புத்தாக்கப் பிரிவு (எம்ஐசி) ஆகியவை மிகவும் எதிர்பார்க்கப்படும் “புதுமை கண்டுபிடிப்பு, வடிவமைப்பு மற்றும் தொழில்முனைவோர் (ஐடிஇ) பூட்கேம்ப்களை (முகாம் - இரண்டாவது கட்டம் ) இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளின் பத்து மையங்களில் தொடங்குகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள ஒரே நோடல் மையமான ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, இந்தியாவில் உள்ள 10 மையங்களில் ஒன்றாகும். இந்த முகாம் நேற்று ( ஜனவரி 29ம் தேதி) தொடங்கி, பிப்ரவரி 2ம் தேதி வரை நடக்கிறது. ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பகுதிகளில் இருந்து 300 மாணவர்கள் முகாமில் பங்கேற்கின்றனர்.

சிறப்பு விருந்தினராக வோல்வோ குழுமத்தின் புதுமை கண்டுபிடிப்புகளின் ஆலோசகர் அர்ஜுன் மற்றும் கௌரவ விருந்தினராக இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் புதிய கண்டுபிடிப்பு துறை நிர்வாக ஆசிரியர், விகாஸ் வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்..

அவர் பேசும் போது, இந்த தனித்துவமான முயற்சி, மாணவர் கண்டுபிடிப்பாளர்களின் புத்தாக்கம், வடிவமைப்பு மற்றும் தொழில் முனைவோர் திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இது. பங்கேற்பாளர்களுக்கு தயாரிப்பு வடிவமைப்பு, பணிச்சூழலியல் வடிவமைப்பு, சிந்தனை மற்றும் பிட்ச்சிங் திறன் ஆகியவற்றில் பயிற்சியளிக்கும்.

பங்கேற்பாளர்கள் பல்வேறு தயாரிப்பு வடிவமைப்பு முறைகளை ஆராய்வதற்கும், வடிவமைப்பு சிந்தனைக் கருத்துகளை வளர்ப்பதற்கும் மற்றும் விலைமதிப்பற்ற அனுபவத்தைப் பெறுவதற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என முகாமின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

தொழில்முனைவோர் கல்விக்கான ஆதரவிற்காக புகழ்பெற்ற வாத்வானி அறக்கட்டளையுடன் இணைந்து இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் தேசிய மற்றும் சர்வதேச புகழ்பெற்ற சில பேச்சாளர்கள் மற்றும் வடிவமைப்பு நிபுணர்கள் பயிற்சி அமர்வுகளை வழங்குவார்கள்.

முகாம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை இந்நிறுவனத்தின் புத்தாக்க மையத்தைச் சேர்ந்த ரதி, நரேந்திரன், சாந்தினி மற்றும் டாக்டர் ரவீன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...