சிவன்மலையில் தேர்த்திருவிழாவின் 12ம்‌ நாள்‌ தெப்ப உற்சவ நிகழ்வு – திரளான பக்தர்கள் பங்கேற்பு

சிவன்மலையில், உற்சவருக்கு நான்கு கால சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. உற்சவர் தெப்பக் குளத்தில் நீராடும் நிகழ்வு நடைபெற்றது. இதனை அடுத்து சிவன்மலை செங்குந்த முதலியார் சமூகத்தினர் சார்பில் 12 ஆம் நாள் முறையை நடத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த ஜனவரி 17ஆம் தேதி புதன்கிழமை துவங்கியது. இதனை தொடர்ந்து ஜனவரி 26ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை சிவன்மலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து 3 நாட்கள் தேரோட்டத்தை சிறப்பித்தனர்.

இதனை அடுத்து மூன்றாம் நாள் தேரோட்டம் முடிந்ததும், இரவு சுமார் 7 மணி அளவில் தேரிலிருந்து உற்சவர் சுப்பிரமணிய சுவாமி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சன்னதிக்கு எழுந்தருளினார். பின்னர் உற்சவருக்கு மகா தீபாராதனைகள் நடைபெற்று வடம் பிடித்த மற்றும் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம்‌ வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று உற்சவருக்கு நான்கு கால சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. உற்சவர் தெப்பக் குளத்தில் நீராடும் நிகழ்வு நடைபெற்றது. இதனை அடுத்து சிவன்மலை செங்குந்த முதலியார் சமூகத்தினர் சார்பில் 12 ஆம் நாள் முறையை நடத்தினர்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மேலும் 13ஆம் நாள்‌ நிகழ்வாக நாளை வியாழக்கிழமை மதியம் 12 மணி அளவில் மஹா தரிசனம் நடைபெற உள்ளது‌. பக்தர்கள் அனைவரும் இப்பூஜையில் கலந்து கொண்டு சுப்பிரமணிய சுவாமி அருள் பெற வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...