கோவை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை பிப்ரவரி மாதம் வரை நீட்டிப்பு

பிப்ரவரி 6 முதல் 27- ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் சென்னையில் இருந்து காலை 7.10 மணிக்குப் புறப்படும் சென்னை-கோவை வந்தே பாரத் சிறப்பு ரயில் ( எண்: 06035), அன்று பிற்பகல் 2.15 மணிக்கு கோவை நிலையத்தை சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை-சென்னை இடையே பயணிகளின் வசதிக்காக வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஜனவரி மாதத்துடன் இந்த ரயிலின் சேவை முடிவடைய உள்ள நிலையில் பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிப்ரவரி 6 முதல் 27- ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் சென்னையில் இருந்து காலை 7.10 மணிக்குப் புறப்படும் சென்னை-கோவை வந்தே பாரத் சிறப்பு ரயில் ( எண்: 06035), அன்று பிற்பகல் 2.15 மணிக்கு கோவை நிலையத்தை சென்றடையும்.

இதேபோல, மறுமார்க்கமாக பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் கோவையில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்குப் புறப்படும் கோவை-சென்னை வந்தே பாரத் சிறப்பு ரயில் (எண்:06036), அன்று இரவு 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.

மேலும் இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...