கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட துவக்க விழா

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு வைக்கபட்டிருந்த அரிசி, பருப்பு ஆகியவற்றின் தரம் குறித்து அவர் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் இன்று (பிப்.01) உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா, கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஸ்வேதா சுமன் ஆகியோர் இருந்தனர். பின்னர் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அங்குள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அப்பொழுது அங்கு வைக்க பட்டுள்ள அரிசி, பருப்புகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது அரசு பேருந்துகளின் தரம், அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, ஓட்டுநர், நடத்துனர்களிடம் ஏதேனும் குறைகள் உள்ளதா என கேட்டறிந்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...