ஆ.ராசா மன்னிப்பு கேட்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் - திருப்பூரில் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

எம்ஜிஆர் குறித்து இதுவரை யாரும் பேசாத அளவிற்கு ஆ.ராசா தரக்குறைவாக பேசியிருப்பதாகவும், அவரின் பேச்சை முதல்வர் ஏற்றுக்கொள்கிறாரா? அல்லது கண்டிக்கிறாரா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.


திருப்பூர்: திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், இந்த விவகாரத்தில் உடனடியாக நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக மாநகர மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் மாநகர மாவட்ட அதிமுகவின் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார்.



அப்போது, தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகரும், மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன், பட்டியலின பெண் திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமே திராவிட மாடல் ஆட்சிக்கு உதாரணம்.

இதில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுக மட்டுமல்லாது திமுகவை வளர்த்ததில் முக்கிய பங்காற்றியவர் எம்ஜிஆர். திமுகவில் உள்ளவர்களையும் முதலமைச்சர் ஆக்கியது எம்ஜிஆர். இதுவரை யாரும் பேசாத அளவிற்கு ஆ.ராசா தரக்குறைவாக பேசியிருப்பதாகவும், அவரின் பேச்சை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்கிறாரா? அல்லது கண்டிக்கிறாரா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

எம்ஜிஆர் குறித்து பேசியதற்காக ஆராசா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் அதிமுக சார்பில் மிகப் பெரும் போராட்டம் நடைபெறும். அது திமுகவிற்கு ஒரு சவாலாக அமையும் என அவர் தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...