பல்லடத்தில் பத்திரிகையாளர் நேசபிரபு கொலை முயற்சி வழக்கில் ஒருவர் சரண்

செய்தியாளர் வெட்டப்பட்டது தொடர்பாக, பிரவீன், சரவணன், பாலபாரதி, ஹரிகரன், ஜெயபிரவீன், முகமது சபி ஆகியோர் கைது செய்யப்பட்டன். மேலும் இதில், தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வந்த நிலையில், பல்லடத்தை சேர்ந்த அன்பு கிருபாகரன் என்பவர் கோவை ஜே.எம்:7, கோர்ட்டில் நேற்று (பிப்.1) சரணடைந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேச பிரபு. சட்ட விரோதமாக பார் நடத்தியது தொடர்பாக செய்தி வெளியிட்டதால், கடந்த 24ம் தேதி, மர்ம கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றது.

படுகாயமடைந்த நேச பிரபுவுக்கு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து கும்பலை தேடி வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, பிரவீன், சரவணன், பாலபாரதி, ஹரிகரன், ஜெயபிரவீன், முகமது சபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வந்த நிலையில், பல்லடத்தை சேர்ந்த அன்பு கிருபாகரன் 20, கோவை ஜே.எம்:7, கோர்ட்டில் நேற்று (பிப்.1) சரணடைந்தார்.

அவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதை தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...