தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து 2024-ம் ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு

இந்த ஆண்டுக்கான 10 வகையான பயிர்கள், 10 தோட்டக்கலைப் பயிர்கள் என 20 வகையான பயிர் வகைகளை வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதாலட்சுமி விவசாயிகள் முன்னிலையில் வெளியிட்டார்.


கோவை: கோவை வடவள்ளி சாலையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் புதிய பயிர்கள் அறிமுகம் செய்து வருகின்றனர்.



அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான 10 வகையான பயிர்கள், 10 தோட்டக்கலைப் பயிர்கள் என 20 வகையான பயிர் வகைகளை வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதாலட்சுமி விவசாயிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணைவேந்தர் கீதாலட்சுமி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியான பெரும்பாலான ரகங்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வேளாண் பயிர்களில் நெல்லில் இருவழி வீரிய ஒட்டு இரகம் மற்றும் பாசுமதி அல்லாத வாசனை கொண்ட நீள் சன்ன 2 இரகங்களும், தானிய பயிர்களில் இனிப்புச் சோளம் உட்பட 4 புதிய இரகங்களும், பயறு வகைப்பயிர் பருத்தி மற்றும் பசுந்தாள் உரப்பயிர் தக்கைப்பூண்டு போன்ற பயிர்களில் தலா ஒரு ரகமும் வெளியிடப்பட்டனர்.

தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மூன்று பழப்பயிர்கள் பன்னீர் திராட்சை, 5 காய்கறிப்பயிர்கள் கத்திரி, கொத்தவரை, வெள்ளைத்தண்டுக் கீரை, சிவப்புக்கீரை மற்றும் பல்லாண்டு முருங்கை வகைகள், சிவப்பு புளி மற்றும் தென்னையில் தலா ஒரு ரகமும் வெளியிடப்பட்டனர். விவசாயிகள் புதிய ரகங்களை சாகுபடி செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டனர். இவ்வாறு துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...