உடுமலையில் கட்டி முடிக்கப் பட்ட நடை மேம்பாலத்தை திறக்க மக்கள் வலியுறுத்தல்

பஸ் நிலையத்திற்கு தென் பகுதியில் உடுமலை-பொள்ளாச்சி சாலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மைய தடுப்புகள் வைக்கப்பட்டு பல லட்சம் மதிப்பீட்டில் லிப்ட்டுடன் கூடிய இரும்பு மேம்பாலமும் கட்டப்பட்டது. ஆனால் அந்த பாலம் இன்று வரையிலும் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் காட்சி பொருளாக உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட பஸ்களும் உடுமலை பஸ் நிலையத்திற்குள் வந்து செல்கின்றது. இதனால் பஸ் நிலையம் மற்றும் அதை சுற்றி உள்ள பொள்ளாச்சி- உடுமலை, பழனி-உடுமலை சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகளவில் இருந்து வருகிறது.

இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வந்தனர். அத்துடன் சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து பஸ் நிலையத்திற்கு தென் பகுதியில் உடுமலை-பொள்ளாச்சி சாலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மைய தடுப்புகள் வைக்கப்பட்டு பல லட்சம் மதிப்பீட்டில் லிப்ட்டுடன் கூடிய இரும்பு மேம்பாலமும் கட்டப்பட்டது.

ஆனால் அந்த பாலம் இன்று வரையிலும் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் காட்சி பொருளாக உள்ளது. சாலையின் மையப் பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு அவதிப்பட்டு வருகின்றனர். மேம்பாலமும் அதில் உள்ள லிப்ட்டும் பயன்பாடு இல்லாமல் சேதமடைந்து வருகிறது.

இதனால் அந்த பாலம் கட்டப்பட்ட நோக்கமும், அதற்கென ஒதுக்கப்பட்ட நிதியும் வீணாகி வருகிறது. பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகின்ற நகராட்சி நிர்வாகம் உடுமலை மத்திய பஸ் நிலையத்திற்கு அருகில் கட்டப்பட்ட மேம்பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டியது அவசியமாக உள்ளது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...