கோவை சுங்கம் பகுதியில் அதிநவீன சிசிடிவி கேமரா காவல் அறை திறப்பு

அதிநவீன சிசிடிவி கேமரா காவல் அறையில், குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, விளக்குகள், ஒலிபெருக்கி மற்றும் மைக், நான்கு அதிநவீன சிசிடிவி கேமராக்கள், கண்காணிக்கும் திரை உள்ளிட்டவை பொருத்தப்பட்டு உள்ளது.


கோவை: கோவை சுங்கம் பகுதியில் புதிய காவல் அறை ஒன்றை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று (பிப்.6) திறந்து வைத்தார். அதில் குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, விளக்குகள், ஒலிபெருக்கி மற்றும் மைக், நான்கு அதிநவீன சிசிடிவி கேமராக்கள், கண்காணிக்கும் திரை உள்ளிட்டவை பொருத்தப்பட்டு உள்ளது.

மேலும் இந்த காவல் அறையில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன சிசிடிவி கேமராக்களில், அந்த வழியாக செல்லும் வாகனங்களின் பதிவு எண்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. தானியங்கி செயல்பாட்டின் மூலம் ஒவ்வொரு வாகன எண்ணும் பதிவேற்றம் செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு உடனடியாக தானியங்கி முறையில் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.



அதேபோன்று சாலையைக் கடப்பவர்கள் எளிதாக கடந்து செல்வதற்கான சிறப்பு சிக்னலையும் கோவை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்.

இந்த சிக்னலை பொதுமக்களை உபயோகப்படுத்தி சாலையை எளிதாக கடக்கலாம் எனவும் மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. கோவை மாநகர காவல் துறையின் இந்த நடவடிக்கை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்கள் கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...