ஓய்வு பெற்ற காவலர்கள் பயிற்சி முகாம் மூலம் உயர் அதிகாரிகளாக தேர்வு பெற்ற காவலர்களுக்கு கோவை காவல் ஆணையர் வாழ்த்து

பத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் காவல்துறை உதவி ஆய்வாளர்களாகவும், காவல்துறை போக்குவரத்து உதவி ஆய்வாளர்களாகவும், அதேபோல காவல் நிலைய தீயணைப்பு துறை அதிகாரி என பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்வாகியுள்ளனர். அவர்களை நேரில் வரவழைத்து கோவை மாநக காவல் ஆணையர் வாழ்த்து தெரிவித்தார்.


கோவை: கோவை அவிநாசி சாலை மற்றும் பாலசுந்தரம் சாலை ஒட்டி உள்ள பகுதியில் அமைந்துள்ள காவலர் பயிற்சி பள்ளியில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மூலம் அரசுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி நடைபெற்று வருகிறது.

அதில் கோவை ஆயுதப்படை மற்றும் காவல் நிலையங்களில் பணியாற்றும் பல்வேறு காவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வந்தனர். இந்த நிலையில் தற்போது பத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் காவல்துறை உதவி ஆய்வாளர்களாகவும், காவல்துறை போக்குவரத்து உதவி ஆய்வாளர்களாகவும், அதேபோல காவல் நிலைய தீயணைப்பு துறை அதிகாரி என பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்வாகியுள்ளனர்.

அவர்கள் அனைவரையும் கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் நேற்று (பிப்.7) நேரில் வரவைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார். பின்னர் இவர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...