கோவை ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது

கோவை ரயில் நிலையம் முதலாவது பிளாட்பாரத்தில் வந்து நின்ற ஒரு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தபோது இருக்கைக்கு அடியில் ஒரு பார்சல் கிடந்தது. அதைப் பிரித்து பார்த்தபோது அதில் 12 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: வட மாநிலத்தில் இருந்து கோவை வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக கோவை ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு (ஆர். பி. ஏப்) தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று (பிப்.9) கோவை ரயில் நிலையத்துக்கு வந்த ரயில்களில் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது முதலாவது பிளாட்பாரத்தில் வந்து நின்ற ஒரு ரயிலில் சோதனை செய்தபோது இருக்கைக்கு அடியில் ஒரு பார்சல் கிடந்தது. அதைப் பிரித்து பார்த்தபோது அதில் 12 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதன் அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்தான் அந்த கஞ்சாவை கடத்தி வந்ததவர் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் மருதமலையை சேர்ந்த கோவிந்தன் (வயது55) என்பது தெரியவந்தது. அவர் எந்த பகுதியில் இருந்து கஞ்சா கடத்தி வந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...