அடுத்து வரும் இரண்டு மாதங்கள் மிக முக்கியமான மாதங்கள் – கோவையில் அமைச்சர் உதயநிதி பேச்சு

கோவை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு குடிநீர் அபிவிருத்தி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், எனது வீட்டிலும், நமது முதல்வர் வீட்டிலும் அதிகம் மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்கின்ற பொருட்களை தான் பயன்படுத்துகிறோம் எனவும் அமைச்சர் உதயநிதி கூறினார்.


கோவை: கோவை மாநகராட்சி மற்றும் புதியதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ரூ.780 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளை அமைச்சர் உதயநிதி கோவையில் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி, கோவை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு இந்த குடிநீர் அபிவிருத்தி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்,

எனது வீட்டிலும், நமது முதல்வர் வீட்டிலும் அதிகம் மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்கின்ற பொருட்களை தான் பயன்படுத்துகிறோம் எனவும் கூறினார்.



மேலும் சீரான குடிநீர் விநியோகத்தை தமிழகம் முழுவதும் திமுக அரசு சிறப்பாக செய்து கொண்டிருபதாவகவும், இன்று தமிழ்நாடு வேகமான வளர்ச்சியை அடைந்து வருவது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் மட்டும் தான் அனைத்து நகரங்களும் சீராக வளர்ந்து வருவதாகவும் தெரிவித்த அமைச்சர் உதயநிதி, மற்ற மாநிலங்களை விட சிறப்பான வளர்ச்சியை தமிழகம் அடைந்து, மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக இந்த திராவிட மாடல் அரசு விளங்கி வருவதகாவும் தெரிவித்தார்.

மேலும் கடந்த 5 வருடத்தில் ஒன்றிய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வரியாக கொடுத்துள்ளதகாவும், ஆனால் நமக்கு திருப்பி தந்தது ஒரு லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் அடுத்த இரண்டு மாதம் மிக முக்கியமான மாதம் எனவும்,

கடந்த காலங்களில் இங்கு சிறு, சிறு தவறுகள் இருந்திருந்தாலும் அதையெல்லாம் மறந்துவிட்டு, அனைத்து நிர்வாகிகளும் நமது திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...