ஆளுநருக்கு எதிராக மகாலிங்கபுரம் பகுதியில் திமுக மாணவரணி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் அவமதிப்பு செய்த ஆளுநரை கண்டித்து கோவை தெற்கு மாவட்ட திமுக மாணவரணி மற்றும் கல்லூரி மாணவர்கள் மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள அரசு கலை கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: சட்டசபை கூட்டத்தொடரில் நேற்று தமிழ் தாய் வாழ்த்து பாடலோடு சட்டமன்றம் தொடங்கும் என்பதால் மாநில அரசின் உரையை படிக்காமல் சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



தமிழ்நாடு சட்டமன்ற மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் அவமதிப்பு செய்தை ஆளுநரை கண்டித்து கோவை தெற்கு மாவட்ட திமுக மாணவரணி மற்றும் கல்லூரி மாணவர்கள் மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள அரசு கலை கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையை அவமதித்து வரும் ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும், தமிழ்நாடு அரசு பணத்தில் ஊதியம் பெரும் ஆளுநர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.



திடீரென மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



பின்னர் காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...